Showing posts with label சாபம். Show all posts
Showing posts with label சாபம். Show all posts

Monday, August 04, 2008

சபித்தல்

பெரும்பாலோர் கோபப்படும் பொழுது தமது நாவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உடனே சாபமிட்டு விடுகின்றனர். அந்த நேரத்தில் மனிதர்கள், உயிரினங்கள், திடப்பொருட்கள், காலங்கள், நாட்கள், நேரங்கள் யாவற்றையும் சபித்து விடுகின்றனர். இன்னும் சொல்வதானால் சிலவேளை தங்களையும் தங்கள் குழந்தைகளையும் கூட சபித்து விடுகின்றனர். மட்டுமல்ல கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் சபிக்கின்றனர். இது தீய ஆபத்தான செயலாகும்.

'....ஒரு மூமினை சபித்தவன் அவனை கொலை செய்தவன் போலாவான்' என்பது நபிமொழி. ஸாபித் பின் ழஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் உள்ளது.

பெண்கள் அதிகம் சபிக்கின்றார்கள். அதுவே அவர்கள் நரகில் நுழைவதற்குக் காரணமாக அமைகின்றது என்பதை நபி (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்தி உள்ளார்கள். அதுபோல சபிக்கின்றவர்கள் மறுமையில் பரிந்துரை செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். இதில் ஆபத்தானது என்னவெனில் அநியாயமாக ஒருவன் ஒருவனை சபித்தால் அவனது சாபம் அவன் மீதே திரும்பி விடுகின்றது. அந்த நேரத்தில் அவன் தனக்கெதிராக தானே இறையருளை விட்டும் தூரமாவதற்குப் பிரார்த்தித்தவனாகின்றான்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

நடை, உடை, பாவனையில் ஆண், பெண்ணுக்கும் பெண், ஆணுக்கும் ஒப்பாகுதல்.

அல்லாஹ் மனிதர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்ற இயற்கை சுபாவம் என்னவெனில் ஒரு ஆண், எந்த ஆண்மையின் மீது அல்லாஹ் அவனைப் படைத்தானோ அந்த ஆண்மையையும் ஒரு பெண், எந்தப் பெண்மையின் மீது அல்லாஹ் அவளைப் படைத்தானோ அந்தப் பெண்மையையும் பேணி பாதுகாப்பதாகும். இது, மனிதர்களின் வாழ்க்கை எந்தக் காரண காரியங்களைக் கொண்டல்லாமல் சீர் பெற முடியாதோ அந்தக் காரணக் காரியங்களில் ஒன்றாகும்.

எனவே ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் ஒப்பாக பாவித்து நடப்பது இயற்கைக்கு முரணானதாகும். மேலும் இது குழப்பத்தின் வாயில்களைத் திறந்து விடுவதாகவும், சமுதாயத்தில் பிளவு ஏற்படுவதற்குக் காரணமாகவும் அமையும். இச்செயல் மார்க்கத்திலும் விலக்கப்பட்டதாகும். ஏனெனில் ஒரு செயலைச் செய்வது சாபத்திற்குரியது என மார்க்க ஆதாரம் கூறினால் அது ஹராம் என்பதையே குறிக்கும். மட்டுமல்ல அது பெரும் பாவமுமாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஒரு நபிமொழியில் இவ்வாறு வந்துள்ளது: 'ஆண்களில் பெண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும் பெண்களில் ஆண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்' (புகாரி)

'பெண்களைப் போலவே நடக்கும் ஆண்களையும் ஆண்கள் போல நடக்கும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்' எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, திர்மிதி)

ஒப்புமை என்பது அங்க அசைவுகளிலும் இருக்கலாம். நடையிலும் இருக்கலாம். உதாரணமாக உடலில், நடையில், பேச்சில் பெண்களைப் போல் நடந்து கொள்ளுதல். மேலும் ஒப்புமை உடையிலும் இருக்கலாம். அதுபோல பெண்கள் அணியக்கூடிய நகைகள், வளையல்கள், காதணிகள், காலணிகள் போன்றவற்றை ஆண் அணிவதும் கூடாது - ஹிப்பி வகையறாக்களிடம் இந்நிலை பரவி உள்ளதைப் போல. அதுபோன்றே ஆண்களுக்குரிய ஆடையை பெண்கள் அணிவதும் ஆகுமானதன்று. மாறாக பெண்கள் உடை, நடை, பாவனைகளில் ஆண்களுக்கு மாறாக நடந்து கொள்வது கடமையாகும். இதர்கு பின்வரும் நபிமொழி சான்றாகும்.

பெண்ணுடைய ஆடையைஅணிகின்ற ஆணையும் ஆணுடைய ஆடையை அணிகின்ற பெண்ணையும் அல்லாஹ் சபிப்பானாக! (நபிமொழி) அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.

ஒட்டு முடி வைத்தல்

அபூபக்ருடைய மகள் அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: 'ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய மகள் புதிதாக மணமுடிக்கப் பட்டிருக்கிறாள். அவளது தலையில் புண் ஏற்பட்டு முடி கொட்டுகிறது. நான் அவளுக்கு ஒட்டு முடி வைக்கலாமா? எனக் கேட்டாள். அதற்கவர்கள், ஒட்டு முடி வைப்பவளையும், வைத்து விடுபவளையும் அல்லாஹ் சபிப்பானாக! எனக் கூறினார்கள்' (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண் தனது தலை முடியுடன் வேறு முடியை வைத்துக் கொள்வதைக் கண்டித்துள்ளார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

இன்று நம்முடைய காலத்தில் விக் (Wig) என்று சொல்லப்படக்கூடிய 'டோபா' வையும் ஒட்டு முடிக்கு உதாரணமாகச் சொல்லலாம். மேலும் இக்காலத்தில் ஒட்டு முடி (சவுரி) வைத்து விடும் பெண்களுக்கு முடி ஒப்பனைக்காரிகள் என்று கூறப்படுகிறது. மேலும் அழகு நிலையங்களில் (Beauty Parlour) பெண்கள் அலங்கரித்துக் கொள்ளக்கூடிய அனைத்தும் விலக்கப்பட்டவைகளைச் சேர்ந்ததாகும். மட்டுமல்ல துர்பாக்கியசாலிகளான நடிகர், நடிகைகள் சினிமாக்களிலும், நாடகங்களிலும் பயன்படுத்தக்கூடிய டோபாக்களும் இதில் அடங்கும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.