இது ஒரு வகையான ஏமாற்றுதலாகும் என்பதில் ஐயமில்லை. திண்ணமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'சதி செய்வதும் ஏமாற்றுவதும் நரகிற்கு கொண்டு செல்லும் காரணிகளில் உள்ளவையாகும்' அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி) நூல்: பைஹகீ.
வியாபாரச் சந்தைகளிலும் ஏலம் நடக்கின்ற இடங்களிலும் மற்றும் வாகனக் கண்காட்சிகளிலும் உள்ள பெரும்பாலான தரகர்கள் விலக்கப்பட்ட காரியங்களை அதிகம் செய்வதால் அவர்களின் சம்பாத்தியம் ஹராமானதாகும். மேலே சொன்ன நஜஷ் எனும் வஞ்சகமான வியாபாரத்திற்கு அவர்கள் உடன்படுவதும் ஹராமான சம்பாத்தியமே. மேலும் வெளியே இருந்து வரும் வாடிக்கையாளர்களிடம் அல்லது வியாபாரியிடம் ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றுவதும் ஹராமானதே. (சரக்கு வியாபாரியினுடையதாக இருந்தால் அவரை ஏமாற்றி) சரக்கின் விலையை குறைத்து விடுகின்றனர். ஆனால் இந்த தரகர்களுக்கு சொந்தமான சரக்காக இருந்தால் விலையை ஏற்றி விடுகின்றனர். வாடிக்கையாளர்களையும் வியாபாரிகளையும் வஞ்சிக்கிறார்கள். ஏலத்தின் விலையை அதிகரிக்கின்றனர். இவ்வாறாக இத்தரகர்கள் மனிதர்களை ஏமாற்றி அவர்களுக்கு தீங்கிழைக்கின்றனர்.
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.