Monday, August 04, 2008

மரணசாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்

பிறருக்குத் தீங்கிழைத்தல் என்பதும் இல்லை, பிறரால் தீங்கிற்கு உள்ளாவதென்பதும் இல்லை என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை அம்சமாகும். அந்த அடிப்படையில் ஒருவன் தனது வாரிசுகளுக்கு (மரணசாசனத்தின் மூலம்) தீங்கிழைப்பது தடை செய்யப்பட்டதாகும். இவ்வாறு செய்கின்றவனுக்கு நபிமொழியில் எச்சரிக்கை வந்துள்ளது.

'யாரேனும் (பிறருக்கு) தீங்கிழைத்தால் அல்லாஹ் அவனுக்குத் தீங்கிழைப்பான். யாரேனும் (பிறருக்கு) சிரமம் கொடுத்தால் அல்லாஹ் அவருக்கு சிரமம் கொடுப்பான்' என்பது நபிமொழி. (அஹ்மத்)

மரணசாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல் என்பதற்கு பல முறைகள் உள்ளன. தனது வாரிசுகளில் ஒருவருக்கு அவருடைய (சொத்து) உரிமையைத் தடுத்தல், அல்லது ஒரு வாரிசுக்கு ஷரீஅத் எவ்வளவு நிர்ணயம் செய்திருக்கின்றதோ அதற்கு மாற்றமாக அவருக்கு மரணசாசனம் செய்தல், அல்லது தனது சொத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் மரணசாசனம் செய்தல்.

எந்த நாடுகளில் மக்கள் இஸ்லாமிய ஷரீஅத் அடிப்படையில் இயங்கக்கூடிய நீதிமன்றங்களுக்குக் கட்டுப்படுதல் என்பது இல்லையோ அந்த நாடுகளில் (இந்தியாவைத் தவிர) ஒரு வாரிசுதாரர் அல்லாஹ் அவருக்கு அளித்த (சொத்து) உரிமையை நீதிமன்றங்களின் மூலமாக பெறுவது சிரமமான காரியமாகும். காரணம் அந்நீதி மன்றங்களில் ஷரீஅத் சட்டத்திற்கு மாற்றமாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்குகின்றன. மேலும் ஷரீஅத்திற்கு மாற்றமாக வழக்கறிஞரால் பதிவு செய்யப்பட்ட அநீதியான மரணசாசனத்தையே செல்லுபடியாக்கும்படி அந்த நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன. அவர்கள் கரங்கள் எழுதியதும் அவர்களுக்குக் கேடுதான். அவர்கள் சம்பாதித்ததும் அவர்களுக்குக் கேடுதான்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.